தமிழ் குடும்பத்துக்காக போராடும் ஆஸ்திரேலிய மக்கள்

பிலோலா: இலங்கையை சேர்ந்த பிரியா மற்றும் நாடேசாலிங்கம் தனி தனியாக படகு மூலம் 2012 மற்றும் 2013ஆம் வருடம் ஆஸ்திரேலியா சென்றனர்.பிறகு பிரியா மற்றும் நாடேசாலிங்கம் திருமணம் செய்து கொண்டு மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலா நகரத்தில் மூன்று வருடமாக வாழ்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு கோபிகா மற்றும் தருணிகா என்ற இரு பெண் குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்தனர்.அந்த இரு குழந்தைகளின் இப்போதைய வயது 4 மற்றும் 2 ஆகும்.அவர்களின் விசாக்கள் காலாவதியான பிறகு, குடும்பத்தை எல்லைப்படை அதிகாரிகள் மார்ச் 2018 இல் வீட்டிலிருந்து அகற்றினர்.அவர்கள் மெல்போர்னில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் வியாழக்கிழமை இரவு வரை இருந்தனர்.பிலோலா சமூகமும் பல்வேறு மனிதாபிமான மற்றும் சமூக நீதிக் குழுக்களும் குடும்பத்தை விடுவிக்க போராடியுள்ளன.

இந்த வழக்கை மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் 2019 மே மாதம் தள்ளுபடி செய்தது.இலங்கை தம்பதியர் மற்றும் அவர்களது ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மகள்கள், கடைசி நிமிட தடை உத்தரவின் பேரில் நாடு கடத்தப்படுவதை தவிர்த்தனர்.ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி மொர்டெச்சாய் ப்ரோம்பெர்க் கடைசி நிமிட தற்காலிக தடை உத்தரவை வழங்கினார். இரண்டு வயது தருணிகாவை அடுத்த புதன்கிழமை வரை நாடு கடத்த தாமதப்படுத்தினார். டார்வின் இராணுவ தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.தற்போது இந்த தமிழ் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு மையத்தில் இருப்பதாகவும் ,அவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தின் வழக்கறிஞர் கரினா ஃபோர்டின் கூறினார்.மேலும் இது தொடர்பாக அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.இதை அறிந்த ஆஸ்திரேலிய மக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts