தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்த பாஜக

சென்னை: 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார்.அவரது தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தெலங்கானா உட்பட கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்தெடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது பாஜக.

Related posts