ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் பாலமுருகன் அ.ம.மு.க ( கடலூர் மாவட்ட செயலாளர்) மனுதாக்கல் செய்தார் .இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால் , திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்க காரணம் போக்குவரத்து இடையூறு என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்று மனுதாரர் தரப்பு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Related posts