சிலை கடத்தல் வழக்கை விசாரித்த சிறப்பு தனி அமர்வு கலைப்பு – உயர்நீதிமன்றம்

சென்னை:தமிழ்நாடு கோவில்களில் பழமையான சிலைகள் கடத்தப்பட்டது.சிலைகளை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தி,அதை சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கப்பட்டது .கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை சிறப்பு நீதிமன்றமாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அனைத்து சிலை கடத்தல் வழக்குகளையும் இரண்டு நிதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு கொண்ட அமர்வை நியமித்து உத்தரவிட்டார். இன்று இந்த அமர்வை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts