டெல்லி: வாக்கு எண்ணிக்கையின் போது 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.தலா 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்தனர்.ஆனால் கடந்த மே 7 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதன் பிறகு சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொது நல மனுவாக தாக்கல் செய்தது.அந்த மனுவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் ,100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு இன்று விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
Related posts
தீவிர சைபர் கிரைம் & நிதி மோசடிக்கான மையப்படுத்தப்பட்ட விசாரணை
சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச் (சிசிபி) இப்போது சென்சிடிவ் வழக்குகளில் முன்னணியில் இருப்பதால், சைபர் கிரைம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையை...யூடியூப் செய்பவர்கள் மற்றவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
21 March 2024: சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. யூடியூபர்கள் மற்றவர்களின் நல்ல பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச்...Google Pay-ஐ நிறுத்த Google அதிர்டி அறிவிப்பு! பயனர்கள் அதிர்ச்சி!
சென்னை: Google நிறுவனம், அமெரிக்காவில் Google Pay பயன்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், Google Pay பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “Google...