கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

சென்னை :கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.இந்த கருத்தால் அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.இந்த பேச்சுக்கு எதிராக 76 இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது. இதனால் கைதாவதை தடுக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினார்கள் . அரவக்குறிச்சி 4ஆவது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு 15 நாட்களுக்குள் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.

Related posts