பள்ளிப்பைகள், மதிய உணவுப்பைகள் வாங்க பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி உள்ளது.அந்த தனியார் பள்ளியில் சீருடை, ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருள்கள் கட்டாயமாக வாங்கவேண்டும் என்று பெற்றோர்களை வற்புறுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களுக்கு ரூபாய் 5000 கேட்பதாக புகார் எழுந்தது.இதை அடுத்து ஹேமலதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களை கண்டிப்பாக வாங்க வற்புறுத்த கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts