விபச்சார புரோக்கர் டெய்லர் ரவி சென்னையில் அதிரடி கைது

சென்னை அக்டோபர் 04, 2018 : 8 வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விபச்சாரம் செய்து வந்த 58 வயது புரோக்கர் டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அடுக்குமரி குடியிருப்பு ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்துள்ளார் . ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்த இவர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருபவர். இது சமந்தமாக இவர் மீது 8 வழக்குகள் உள்ளது. சில நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை பிடிக்க போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். இதற்கு காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான் என்று கூறப்படுகிறது . இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை வைத்து தொழில் ஈடுபடுத்தி பணம் சம்பாரித்து வந்துள்ளார் . போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ரவியை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக ஒரு தனிப்படையே அமைக்கப்பட்டு அவரது ரகசிய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. வழக்கம்போல் இளைஞர்கள் ரவியின் வீட்டிற்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள் . இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 இளம்பெண்களை மீட்டு ரவியையும் கைது செய்தனர். 8 வருடங்களாக ரவியை காப்பாற்றிய உயர் அதிகாரிகள், பெரிய தலைகள் யார் என்பது பற்றி தெரியவரும் என்று கூறப்படுகிறது.

சென்னை: அக்டோபர் 04, 2018

8 வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு விபச்சாரம் செய்து வந்த 58 வயது புரோக்கர் டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அடுக்குமரி குடியிருப்பு ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்துள்ளார் . ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்த இவர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருபவர். இது சமந்தமாக இவர் மீது 8 வழக்குகள் உள்ளது.

சில நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை பிடிக்க போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். இதற்கு காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான் என்று கூறப்படுகிறது .

இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை வைத்து தொழில் ஈடுபடுத்தி பணம் சம்பாரித்து வந்துள்ளார் . போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ரவியை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக ஒரு தனிப்படையே அமைக்கப்பட்டு அவரது ரகசிய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

வழக்கம்போல் இளைஞர்கள் ரவியின் வீட்டிற்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள் . இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 இளம்பெண்களை மீட்டு ரவியையும் கைது செய்தனர்.

8 வருடங்களாக ரவியை காப்பாற்றிய உயர் அதிகாரிகள், பெரிய தலைகள் யார் என்பது பற்றி தெரியவரும் என்று கூறப்படுகிறது.

 

Related posts