அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது நில அபகரிப்பு புகார்

Land grabbing case against former Vice chancellor of Anna university Mr.Kalanidhi

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடம் ஒன்றை, பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் துணைவேந்தர் அபகரித்துக் கொண்டதாக இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் (ஐ.எஸ்.டி.ஏ.) நிர்வாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இது பற்றி இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தினுடைய தலைவர் ஆர்.முருகேசன் (நேற்று) சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

Land grabbing case against former Vice chancellor of Anna university Mr.Kalanidhi

சென்ற 1992-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக கழகத்திற்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பாக தொழிற்ப்பயிற்சி மையம் ஒன்று கட்டப்பட்டது. இதற்காக தனியாக ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக திரு.நடேசன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நடேசன் சாலை விபத்தில் ஒன்றில்  இறந்து விட்டார். இதனையடுத்து அப்போதைய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த திரு.ஏ.கலாநிதி அந்த இடம் மற்றும் கட்டடத்தைஆக்கிரமித்துக் கொண்டார்.

 இந்த நாள் வரை இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்திடம் அந்த இடத்தையும் கட்டடத்தையும் அவர் ஒப்படைக்கவே  இல்லை. இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் தானும் ஓர் உறுப்பினராக உள்ளதால் அதனை தான் எவரிடமும் ஒப்படைக்க மாட்டேன் எனக் கூறுகிறார். வரவு செலவு கணக்கு குறித்து எதாவது கேட்டால், அடியாட்கள் மூலம் மிரட்டல் விடுக்கிறார். இது பற்றி காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

English Summary: Land grabbing case against former Vice chancellor of Anna university Mr.Kalanidhi

Land grabbing case against former Vice chancellor of Anna university Mr.Kalanidhi

Related posts