நகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது போலீசில் புகார் கொடுத்த இயக்குனர்

நகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது போலீசில் புகார் கொடுத்த இயக்குனர் சென்னை: கடந்த பிப்ரவரி 7 ம் தேதி சீயோன் இயக்கிய 'பொதுநலன் கருதி' என்ற திரைப்படம் வெளியானது. 'பொதுநலன் கருதி' படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிக்கு நடிகர் கருணாகரன் வரவில்லை என்று கூறப்படுகிறது . இது தொடர்பாக அவரது வருத்தத்தை இயக்குனர் சீயோன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் . இதற்கு கருணாகரன் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க கருணாகரனுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் நடிகர் கருணாகரன் வரவில்லை. செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன் , எங்களுக்கு கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடுவதில் பிரச்சனை வந்தது . இப்போது கருணாகரன் மிரட்டுகிறார் என்றார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை: கடந்த பிப்ரவரி 7 ம் தேதி சீயோன் இயக்கிய ‘பொதுநலன் கருதி’ என்ற திரைப்படம் வெளியானது. ‘பொதுநலன் கருதி’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிக்கு நடிகர் கருணாகரன் வரவில்லை என்று கூறப்படுகிறது .

இது தொடர்பாக அவரது வருத்தத்தை இயக்குனர் சீயோன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் . இதற்கு கருணாகரன் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க கருணாகரனுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் நடிகர் கருணாகரன் வரவில்லை.

செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன் , எங்களுக்கு கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடுவதில் பிரச்சனை வந்தது . இப்போது கருணாகரன் மிரட்டுகிறார் என்றார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts