ராஜஸ்தானில் குடிகாரர்கள் சம்பளம் மனைவியிடம் கொடுக்கப்படும்

alcoholic Government staff salary will be given to spouse in rajasthan குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களும் மதுவுக்கு அதிகளவில் அடிமையாகி கிடக்கின்றனர். வாங்கும் சம்பளம் முழுவதையும் இதற்கே செலவழித்து விட்டு, குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற அவலத்தை தடுக்கும் வகையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அதிரடி சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். அதன்படி குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியரின் சம்பளத்தில் பாதி மனைவியிடம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகள் 1971ல் சமீபத்தில் திருத்தம் செய்துள்ளார். ஒரு ஊழியர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருடைய சம்பளத்தில் பாதி மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இருப்பினும்…

Read More