ரஞ்சிதா-நித்தியானந்தா வீடியோ தனியார் Tv மன்னிப்பு கேட்க நீதிபதி உத்தரவு

Private television channel apologize for wrong news: Court Order நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா தொடர்பாக தவறான செய்தி மற்றும் வீடியோவினை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தன்னையும், நித்யானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். மேலும் இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் வீடியோவை ஒளிபரப்பிய தொலைக்காட்சி செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி…

Read More