இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே

Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர்…

Read More

இலங்கை மனித உரிமை மீறல்கள் : இந்தியா, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்களின் காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு

human rights violations against the Tamils in Sri Lanka’s war against the LTTE கொழும்பு: மனித உரிமை மீறல்கள் குறித்த பலத்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுக்கள், கனடா, இந்தியா, மற்றும் மொரீஷியஸ் நாட்டின்  பிரதமர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு இடையே காமன்வெல்த் மாநாடு கொழும்பில் இன்று துவங்குகிறது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த காமன்வெல்த் மாநாட்டிற்கு போகவி்ல்லை. அதற்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தடபுடலாக ஏற்பாடோடு கொழும்பு சென்றுள்ளார். கனடா நாட்டின் சார்பாக ஈழ தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்களை கண்டித்து இந்த காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணித்து விட்டது. அதே போல் மொரீஷீயஸ் பிரதமர் தான் போகவில்லை என்று அறிவித்து…

Read More