தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார். இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார். ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில்…

Read More

சென்னையில் துப்பாக்கி முனையில் மருத்துவர் வீட்டில் பணம் நகை கொள்ளை

Chennai doctor’s wife robbed at gunpoint சென்னை அண்ணா நகரில் டாக்டரை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகைகள், 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை…

Read More

ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…

Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked காபுல், மே 23- ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். நவீன துப்பாக்கிகளை ஏந்திவந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் இந்திய தூதரகத்தின் மீது சரமாரியாக துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள். இந்த துப்பாக்கி தாக்குதலில் உண்டான சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், தூதரகத்தை சேர்ந்த பணியாளர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார். மேலும், தூதரகத்தினுள் நுழைய…

Read More

சென்னையில் லேசான நில அதிர்வு : சென்னை வாசிகள் அச்சம்

Earthquake off Odisha sparks tremors, panic in Chennai வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமாநிலங்கள் மற்றும் சென்னையில் பல இடங்களில் பூமி அதிர்ந்தது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் வங்கக் கடலில் 10 கிமீ ஆழத்தில் புதன்கிழமை இரவு 9.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு, வட இந்தியா மற்றும் சென்னையில் சில இடங்களில் அதிர்வு உணரப்பட்டது. ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் உத்தர பிரதேசத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அடையாறு, போரூர், திருவல்லிக்கேணி, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி…

Read More

ஊழலும், விலைவாசி உயர்வும் தான் காங்கிரஸ் படுதோல்விக்கு முக்கிய காரணம் – மன்மோகன் சிங்

நடுவர் மற்றும் சமரச (திருத்த) மசோதா, 2021 ஐ மக்களவை நிறைவேற்றியது File name: parliament-ls.jpg

Abnormal Corruption and  Price hike lead to Congress failure in Parliament election 2014 : Man Mohan Singh புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைகிறது, ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் 50–க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எவருமே எதிர் பார்க்காத இந்த படு தோல்வி அந்த கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதுவும் காங்கிரசுக்கு சாதகமான இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசின் இந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் கூறியுள்ளார்கள். மேலும் இந்த தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு , சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்கள். எனினும் அதை…

Read More

டி.சி.எஸ். மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : – 850 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

uma maheswari Rape and Murder case  : 850 pages charge sheet has been filed in Chengalpet court on Tuesday in the case of a software engineer uma maheswari by IT company Tata consultancy Services (TCS) who was brutally raped and murdered in February 2014. சென்னை ஏப்ரல் 30- சென்னை, கேளம்பாக்கத்தில் நடந்த டி.சி.எஸ். நிறுவன மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் நேற்று 850 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னையிலிருக்கும், கேளம்பாக்கம் பகுதி சிறுசேரி சிப்காட் வளாகத்திலிருக்கும் டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலையில் இருந்தவர் உமாமகேஸ்வரி (வயது 24). கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதியன்று இரவு 10.30-க்கு பணியை முடிந்து விட்டு…

Read More

பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு

Foot wear thrown on Bihar chief Minister Nitish kumar while speaking about congress and BJP in Public meeting at Bihar பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு பெகுசராய் எனும் பகுதியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பா.ஜ.க வை கடுமையாக தாக்கி மற்றும் குற்றம் சாட்டி பேசினார். அப்பொழுது கூட்டத்திலிருந்து, முதலமைச்சர் நிதிஷ்குமாரை குறிவைத்து, செருப்பு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும், வீசப்பட்ட அந்த செருப்பு, நிதிஷ் குமார் மீது விழ வில்லை. இதனையடுத்து, செருப்பு வீசப்பட்ட இடத்தை நோக்கி காவல்துறையினர் விரைந்து சென்றன்ர். ஆனாலும் செருப்பு வீசிய நபர், அவர்களிடம் அகப்படாமல்…

Read More

இந்திய வங்கிகளில் யாருடையது என்று தெரியாது கிடக்கும் 3,652 கோடி ரூபாய்

fund lying unclaimed at banks in india : Rs 3,652 crore   2012- டிசம்பர் ஆண்டின் நிலவரத்தின் படி, இந்தியா முழுவதும் இருக்கும் வங்கிகளில் 3,652 கோடி ரூபாய் யாருடையது என்று தெரியாமல் பல்வேறு வங்கிக் கணக்குகளில் கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ருபாய் 714 கோடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது: இந்த பட்டியலின் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது. இரண்டவது Â இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது. இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் பல பேர் தங்களுடைய சேமிப்பு கணக்குகளை துவக்கி விட்டு அவைகளை தேவையான பராமரிப்பு ஏதும் செய்யாமல் விட்டு விடுகின்றனர். மேலும் பல்வேறு…

Read More

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் : நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்

Scientists find evidence of granite on Mars செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு பின்னர் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள கிரகமாக கருதப்படுவது செவ்வாய் கிரகம். ஒருபக்கம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற பிரத்யேக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், உலக நாடுகள் செவ்வாய் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள விண்கலங்களை அனுப்பிவைத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இந்தியாவும் மங்கல்யான் என்னும் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையுமென தெரிகிறது.  இந்நிலையில் செவ்வாயில் நிலபரப்புகளை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏற்கனவே நாசாவால் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் என்னும் விண்கலம், அங்கு கிரானைட் இருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கிரானைட்டில் இருக்கும் பிளட்ஸ்பர் என்னும்…

Read More

நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா கொடுக்க கூடாது என அமெரிக்க எம்.பி பார்லிமெண்டில் தீர்மானம்.

American MP Keith Ellison called on a Resolution in American parliament  to continue denying visa to Narendra Modi by US government வாஷி்ங்டன்: அமெரிக்க பார்லிமெண்ட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவிற்குள் நுழைய விசா வழங்கக் கூடாது என்று, அமெரிக்க எம்.பி யான., கெய்த் எலிசன், தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில், இந்தியாவி்ல் இருக்கும்  சிறுபான்மையினர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு முதல் நரேந்திர மோடிக்கு, விசா தர அமெரிக்கா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.    கெய்த் எலிசன், ஜனநாயக கட்சி சார்பில் ‘மின்னசோட்டா’ வில் வெற்றி பெற்றவர். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர் தான் அமெரிக்க வரலாற்றில் செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம்மாகும். American MP Keith…

Read More