மேலும் தளர்வுகள் அறிவிப்பு… தமிழ் நாடு முழுவதும் சென்னை உட்பட…

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால், தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பெரிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால், தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More

கொரோனாவில் கொள்ளையடிக்கும் தில்லாலங்கடி திருட்டு அதிகாரிகள்!

கொரோனாவில் கொள்ளையடிக்கும் தில்லாலங்கடி திருட்டு அதிகாரிகள்!

சென்னை; ‘கொரோனா பரிசோதனைக்காக தினமும், 50 பேரை கட்டாயம் பிடித்து வர வேண்டும்’ என, களப் பணியாளர்களுக்கு, மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஒரு நோயாளிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வகையில், ‘பில்’கணக்கிடப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்று சென்னையில் கொரோனா தொற்றை கண்டறிய, களப் பணியாளர்கள் வாயிலாக தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், இலக்கு நிர்ணயிக்காமல், தொற்று தடுப்பை மட்டுமே குறிக்கோளாக வைத்து, மாநகராட்சி செயல்பட்டு வந்தது.இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, பரிசோதனை செலவு, வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான செலவு, உணவு, மருந்து, மாத்திரை என, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை, ‘பில்’ போட்டு, கணக்கு எழுதப்படுவதாக கூறப்படுகிறது. இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி,…

Read More

ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது கண்டுபிடிப்பு.

ஆப்பிரிக்காவை சார்ந்த லைபீரியா  நாட்டிலிருந்து புது தில்லி வந்த இந்தியருக்கு எபோலா நோய் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் தற்சமயம் நலமாகி வருவதாகவும், பொதுமக்கள் எவரும் பீதியடையத் தேவையில்லை எனவும் இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது, லைபீரியா நாட்டில் இருந்த அந்த நபருக்கு எபோலா நோய் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளார். எனினும் அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு புது தில்லியில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவருடைய நிலைமை தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருகிறார்கள். ஆகவே, பொது மக்கள் எவரும் அச்சம் கொண்டு பீதியடைய அவசியம் இல்லை என அவர்கள் கூறினார்கள். மேலும் எபோலா நோய் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த நபருக்கு டெல்லியில்…

Read More

சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை சிகிச்சை பெற்ற 8 பெண்கள் மரணம்

Chhattisgarh: Sterilisation surgery leaves 8 women dead, 55 still ‘in trouble’ சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் தக்கட்பூரில் அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு முகாம் நடந்தது. இதில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் இறந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் புறநகரில் பென்தாரி கிராமத்தில் நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8 ஆம் தேதி நடந்த கருத்தடை அறுவை சிகிச்சை முகாமில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் அந்தப் பெண்கள் மருந்துகள் வழங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களில் 29 பெண்கள், வாந்தி மற்றும் வயிற்று வலி என பல்வேறு பிரச்சனை காரணமாக பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Read More

உலகம் முழுவதும் உயிர் கொல்லி எபோலா வைரஸ் தாக்கி 13,268 பேர் பாதிப்பு; 4,960 பேர் சாவு

ஜெனீவா: உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் தாக்கி உலகம் முழுதும் சுமார் 13,268 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அதில் 4,960 பேர் இறந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், உயிர்கொல்லி எபோலா நோயினால் தக்கபட்டவர்களில் 70 சதவீதம் பேர் இறந்துவிடுவதாகத் தெரிவிக்கப்படுவதனால், நிஜத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்ககூடும் என அஞ்சபடுகிறது. ஆப்பிர்க்க கண்டத்தில் இருக்கும் லைபீரியா நாட்டில் எபோலா நோய் பாதித்த 6,619 நபர்களில் 2,766 பேர் உயிரிழந்துள்ளனர். சியரா லியோனிலுள்ள 4,862 எபோலா நோயாளிகளில், 1,130 பேர் உயிரிழந்தனர்.கீனியா நாட்டில், எபோலா தாக்கிய 1,760 பேரில் 1,054 பேர் அந்த நோய்க்கு இறந்துள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Ebola has killed 4,950 people of the 13,241 infected since the…

Read More

பெல்ஜியம் நாட்டில் பள்ளிகளில் சிறுவர்கள் மின் சிகரெட் பிடிக்க தடை…

E-cigarettes indeed prohibited in Flemish schools at Belgium which are proving to be very popular with schoolchildren. பள்ளி குழந்தைகல்டம் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்துவரும் மின் சிகரெட் பெல்ஜியத்தில் தாரளமாக சிறுவர் சிறுமிகளுக்கு கிடைகிறது. குழந்தைகளின் சிகரெட் என்று அழைக்கப்படும் மின் சிகரெட் மிகவும் கேடு விளைவித்து குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கிறது என்றும் அதை உடனடியாக தடை செய்யாவிட்டால் இதனால் ஆகக்கூடிய விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கும் என்று பெல்ஜியம் நாட்டு புதிய நோய்கள் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. ஆதலால் மின் சிகரட்டை தடை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் புகைபிடிக்கும் சட்ட தடை கீழ், பள்ளிகளில் சிறுவர் சிறுமிகள் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. E-cigarettes indeed prohibited in Flemish schools : E-cigarettes banned in belgium schools…

Read More

லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய் அறிகுறி…

Ebola symptoms for 6 passengers in india transiting through Delhi to Mumbai. லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய்… புதுடெல்லி :– மேற்கு ஆப்பிரிக்க கண்ட பகுதி யில் இருக்கும் கினியா, நைஜீரியா, லைபீரியா, சியார்ராலோன், ஆகிய நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இதுவரை அங்கு அந்த நோய்க்கு 1500க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ‘எபோலா’ நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இந்நோயை பரவவிடாமல் தடுத்திட அனைத்து சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் ‘எபோலா’ நோய் பரவாமல் தடுத்திட தீவிரமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்க்கென டெல்லி மற்றும் மும்பை ஆகிய விமான நிலையங்களில் சிறப்பு குடியுரிமை நுழைவு கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு…

Read More

8 நிமிடத்தில் 14 கி.மீ., தூரத்தைக் கடந்த இதயம்

Heart passed 14 Km distance within 8 minutes வங்கி பெண் ஊழியரின் மூளைச்சாவு நிலையை அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளுல்ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது. சென்னை மணப்பாக்கத்தில் இருந்து, அவரது இதயத்தை, 8 நிமிடங்களில்,14 கி.மீ., தூரத்தைக்கடந்து, முகப்பேருக்குகொண்டுச்செல்லப்பட்டது. மூளைச்சாவு நிலை: எப்சிபா, வயது 22, இவர் சென்னை பாடியைச் சேர்ந்த,தனியார் வங்கி ஊழியர். இவர், உதயம் தியேட்டர் அருகே, கடந்தஜூலை, 27ம் தேதி மாலை, விபத்தில் சிக்கி, பலத்த காயம் அடைந்து, சென்னை, ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையும்பலனின்றி, மூளைச்சாவு நிலையை அடைந்தார்.இதையடுத்து, அவரின்குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை, தானம் அளித்தனர். இதையடுத்து, அறுவைச் சிகிச்சை ‘மியாட்’ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு, நடந்தது. இதில், இதயம், கண்கள்,சிறுநீரகங்கள், மற்றும் கல்லீரல் என, ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டது.…

Read More

இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம்

232 Teeth were removed from young man இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம் பொதுவாக, பெரியவர்கள் என்றால் 32 பற்களும், குழந்தைகள் என்றால் 24 பற்களும் இருக்கும் என்பது இயற்கை நியதி. ஆனால், ஒரு இளைஞனின் வாயில் இருந்து, இதற்கு மாறாக, 232 பற்களை, டாக்டர்கள் நீக்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் வசிப்பவர், ஆஷிக் கவாய், வயது 17. மும்பையில் உள்ள, ஜே.ஜே., மருத்துவமனைக்கு முகம் முழுவதும் வீங்கிய நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன் வந்தார் ஆஷிக். டாக்டர்கள், ஆஷிக்கை பரிசோதித்த பின்னர், அவரை பல் டாக்டரிடம் அனுப்பினர். அங்கு பல் டாக்டர், ஆஷிக்கை பரிசோதித்து அளவுக்கும் அதிகமாக கடைவாய் பல் பெரியதாக உள்ளதால், முகம் வீங்கியுள்ளது. எனவே, அந்தப் பல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்றும் கூறினார்.…

Read More

19வது நூற்றாண்டு வரை இல்லாத – தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படி

millets cooking classes and benefits சத்து உள்ள சிறுதன்யத்தை வைத்து சுவையான உணவு தயாரிப்பது எப்படி??. சென்னை மொகப்பேரில் சிறுதன்யத்தின் மகத்துவம் பற்றியும் அதனை வைத்து ஆரோக்கிய சமையல் செய்வது எப்படி எனவும் உரை நிகழ்த்த பட இருக்கிறது. உரை நிகழ்த்துபவர் அரிமா.செல்வராணி சரவணன். சிறுதன்யங்கள் : சாமை, திணை, வரகு, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, மற்றும் சோளம் மறந்துபோன நமது பாரம்பரிய உணவான சிறுதான்யத்தை வைத்து வகை வகையான சுவை மிகுந்த உணவு தயாரித்து நம்மிடையே 19வது நூற்றாண்டு வரை இல்லாத தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படி என விளக்க உரை நடைபெற இருக்கிறது. நேரம் : காலை 11 முதல் மதியம் 12 வரை. தேதி : 7 பிப்ரவரி 2014 அணுகவேண்டிய முகவரி :…

Read More