சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு : மறுபடியும் முதல்ல இருந்தா ???

Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai

Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai

சென்னை: சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் மின்வெட்டை தமிழக மின்சார வாரியம் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல மாதகாலமாக இருந்து வந்த மின்வெட்டு பிரச்சினை, கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ காற்றின் பயனாக காற்றாலைகளில் தேவையான அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் தற்காலிகமாக மின்வெட்டு பிரச்னை ஓய்ந்தது. எனினும் கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் மின்வெட்டு பிரச்சினை ஆரம்பித்துள்ளது.

Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai

தினசரி ஒரு மணி நேரம் என துண்டிக்கபட்டிருந்த மின்சாரம் தற்சமயம் மென்மேலும் உயர்ந்து நகர்ப்புறங்களில் தினசரி 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுகிறது. மேலும் தமிழக கிராமப்புறங்களில் தினசரி 6 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுகிறது. இந்த காரணத்தினால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்கபட்டுள்ளார்கள். கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்ட மக்கள் மின்சாரத்தை மட்டுமே நம்பி தொழில் செய்கிறார்கள். தற்சமயம் ஆரம்பித்துள்ள மின்சார பிரச்சினையால் சுமார் 6 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுகிறது. இதனால் அந்த பகுதியில் வாழும் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்கு முன்னால் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டு இப்பொழுது 5 மணி நேரம் கூடுதலாகியுள்ளது. இதனால் மின்சாரத்தை மட்டுமே நம்பிஇருக்கும் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai

Related posts