சென்னையில் 10 புதிய பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகள்: முதல்வர் ஆணை

Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai : Tamil Nadu government under Chief minister J Jayalalitha have decided to procure the vegetables from the farmers and market to sell it through  ‘Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai’ its own outlets at damn cheap price.

சென்னையில் 10 புதிய பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகள்: முதல்வர் ஆணை

தமிழ்நாடு அரசு, வெங்காயம் போன்ற காய்கறிகளுடைய விலை உயர்வினை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது எனவும் இதைதொடந்து சென்னையில் மேலும் 10க்கு மேற்பட்ட பண்ணைப் பசுமை அங்காடிகள் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார்.

Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai : Tamil Nadu government

சட்டப்பேரவையில் முதல்வர் புதன்கிழமை கூறியுள்ளதாவது : மத்திய அரசினால் உண்டான வெங்காயம் விலை உயர்வை சமாளிப்பதற்கு தமிழக அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கோயம்பேடு மொத்தவிற்பனை காய்கறி அங்காடியில் பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 75 ருபாய் முதல் 80 ருபாய்  விரை விற்பனை செய்யப்படுகிறது. நவீனமயமான கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ 70/- க்கும் சாம்பார் வெங்காயம் ரூ 95/- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பண்ணைப் பசுமைகடைகளில் தரம் வாய்ந்த பெரிய வெங்காயம் கிலோ ரூ 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.60க்கு பொது மக்களுக்கு உருவாகி இருக்கும் சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொள்முதலை கூடுதலாக்கி, நுகர்வோருக்கு மலிவான விலையில் வெங்காயம் கிடைக்க பெறுவதை உறுதி செய்து, சென்னை பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளில் தற்சமயம் நாள் ஒன்றுக்கு சுமார் 1 டன் சாம்பார் வெங்காயமும், 6 டன் பெரிய வெங்காயமும், விற்பனை செய்யப்படுகிறது.

அக்டோபர் 26ம் தேதி முதல் வெங்காயத்தின் கொள்முதல் இரண்டு மடங்காக ஆக்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் 30 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் சென்னையில் இருக்கின்றன. காய்கறி களுடைய விலை கட்டுபாட்டை கொண்டு வர உடனடி நடவடிக்கையாக இன்னும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 10 புதிய பண்ணைப்பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகள்: முதல்வர் ஆணை

 Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai :

Tamil Nadu government under Chief minister J Jayalalitha have decided to procure the vegetables from the farmers and market to sell it through  ‘Pannai Pasumai Nugarvor Kootturavu Kadai’ its own outlets at damn cheap price.

Related posts