பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது முதலமைச்சர் நீதிமன்றத்தில் மனு!

Bribe for Tamil cinema on the RTI Act. : News in Nakkeeran Gopal

தன்னைபற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்ததாக ஒரு திரைப்பட இயக்குனர் மீதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Bribe for Tamil cinema on the RTI Act.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ” கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட பத்திரிக்கை நக்கீரன் வார இதழில் ‘லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கு லஞ்சம் கேட்கும் அமைச்சர் மந்திரி’ எனும் தலைப்பில் ஓர் செய்தி வெளியிடப்பட்டது.

அதில் ‘அங்குசம்’ எனும் தமிழ் திரைப்படத்தின் இயக்குனர் மனுக் கண்ணனுடைய பேட்டி வெளிவந்திருந்தது. தான் லஞ்ச எதிர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தயாரித்துள்ள தமிழ் திரைப்படத்துக்கு வரி விலக்கு தர அமைச்சருடைய அலுவலக தனிப்பட்ட உதவியாளர் (பி.ஏ) லஞ்சம் கொடுக்க வற்புறுத்தினார் என்றும் மற்றும் பல செய்திகளையும் கூறியுள்ளார். இந்த செய்தி முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையினில் உள்நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பாக வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆகவே, எந்த ஓர் ஆதாரமும் இன்றி செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், செய்தியாளர் ஜேஆர்டி, திரைப்பட இயக்குனர் மனுக்கண்ணன் ஆகியவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்”

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

Bribe for Tamil cinema on the RTI Act

A Tamil film director, who directed a cinema on the RTI Act, has alleged the Minister’s P.A (personal assistant)  demanded Rs 5 lakh bribe for granting tax concession for that feature film. News in Nakkeeran Gopal

Related posts