சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் திருட்டு

glass broken and stolen 4 lakh rupees and a laptop from car in t nagar

glass broken and stolen 4 lakh rupees and a laptop from car in t nagar

சென்னையில் நேற்று மாலை கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து 4 லட்சம் ருபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டிருக்கிறது.
ரியாஸ்அகமது (வயது 32) என்பவர் பாலவாக்கம் பல்கலைநகரைச் சேர்ந்தவர். இவர் தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் ஆடை வாங்குவதற்கு நேற்று மாலை (செவ்வாய்கிழமை)  சென்றார். காரில் சென்றிருந்த அவர், கடையின் அருகில் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். உடுப்புகள் வாங்கிய பின் காரை எடுப்பதற்கு வந்த ரியாஸ் அதிர்ச்சியடைந்தார். அவரது காரின் கண்ணாடி உடைக்கபட்டிருந்தது. அதில் வைக்கபட்டிருந்த 4 லட்ச ரூபாயும், தனது லேப்டாப்பும் காணமல் போயிருந்தது.

இது பற்றி ரியாஸ், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

glass broken and stolen 4 lakh rupees and a laptop from car in t nagar

Related posts