ராஜஸ்தானில் குடிகாரர்கள் சம்பளம் மனைவியிடம் கொடுக்கப்படும்

alcoholic Government staff salary will be given to spouse in rajasthan

குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களும் மதுவுக்கு அதிகளவில் அடிமையாகி கிடக்கின்றனர். வாங்கும் சம்பளம் முழுவதையும் இதற்கே செலவழித்து விட்டு, குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற அவலத்தை தடுக்கும் வகையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அதிரடி சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். அதன்படி குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியரின் சம்பளத்தில் பாதி மனைவியிடம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகள் 1971ல் சமீபத்தில் திருத்தம் செய்துள்ளார். ஒரு ஊழியர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருடைய சம்பளத்தில் பாதி மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இருப்பினும் இதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. முதலில் போதைக்கு அடிமையாகி விட்டதால் குடும்பத்தை தனது கணவர் கவனிப்பது இல்லை என்று மனைவி புகார் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், கணவனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். பின்பு அரசு ஊழியர் போதைக்கு அடிமையாகி கிடப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுக்க வேண்டும். இவ்வளவு சம்பிரதாயங்களும் முடிந்தால்தான், மனைவியிடம் பாதி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது நடைமுறையில் சாத்தியப்படாது என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

alcoholic Government staff salary will be given to spouse in rajasthan

alcoholic Government staff salary will be given to spouse in rajasthan

Related posts