ரு.443 கோடி மதிப்புள்ள வீட்டுவசதி வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு.

tamil nadu housing board land encroached

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வருடாந்தர தணிக்கை அறிக்கையின் படி மொத்தமாக ரூ.442.99 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாகவும் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கையகபடுத்த நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுவசதி வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு.

இந்த ஆக்கிரமிப்பு சென்னையில் அதிகபடியாக  அண்ணாநகர், பெசன்ட் நகர், முகப்பேர், கே கே நகரில் நடந்திருப்பதாகவும் இதுபோல் கோவையுலும் நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

நிலங்கள் ஆக்கிரமிப்பு விவரம்:

  • அண்ணாநகர் – ரூ.178.கோடி
  • பெசன்ட் நகர் – ரூ.177.28கோடி
  • முகப்பேர் – ரூ.47.63கோடி
  • கோவை – ரூ.17.6கோடி

இதில் கே.கே நகர் பகுதியில் 229.6 ஏக்கர் நிலமும், கோவையில் 82.64 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கையகபடுத்தபட்ட சுமார் 3,353 ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் அண்ணாநகர், பெசன்ட் நகர், கே கே நகர், முகப்பேர் பகுதியில் பெரும்பாலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

tamil nadu housing board land encroached

Related posts